Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடவெட்டி கோவிலில் இன்று ... சக்கரபாணி ஸ்வாமி கோவிலில் மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிகும்பபேசுவர ஸ்வாமி கோவிலில் பிப்.,16ல் தேரோட்ட விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2013
11:02

கும்பகோணம்: சோழவளநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில், 26வது திருத்தலமாக, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகி ய, இருவராலும் பாடப்பெற்ற தலமாக, கும்பகோணம் ஆதிகும்பேசுவரஸ்வாமி கோவில் திகழ்கிறது. காசி, திருவண்ணா மலை, திருத்தில்லை முதலான சிவத்தல வரிசையில், 11வது திருத்தலமாக திகழ் கிறது. ஆன்மாக்கள் உய்வு பெற, சிவபெருமான் நான்முகன் படைப் பிற்குக் காரணமாகிய, ஜீவ வித்துக்களை அமுத கும்பத்துள் வைத்துத் தந்து, அதனையே சிவலிங்க மூர்த்தமாக அமைத்து, தம்மை தாமே வழிபட்ட தலம் என்ற சிறப்புடையது. 72 ஆயிரம் கோடி மந்திரவாதிகளுக்கு அதிபதியாகி, அதனை, 51 பாகங்களாக்கி தன்னுருவில் தாங்கி ன்று அருளாட்சி செய்யும், ஆதியா னவர் இங்கு மந்திர பீடேசுவரியாய் சர்வ மங்களத்தை அளிக்கும் மங்களாம்பி கையாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் தலமாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய, மூன்றாலும் சிறப்புடையது.

தமிழகத்திலேயே சப்தஸ்தான பல்லக்கு உற்சவம் நடக்கும், மூன்று திருத்தலங்களில் (திரு வையாறு, கும்பகோணம், கராப்பள்ளி) ஒன்றாகவும். தமிழகத்திலிலேயே, 63 நாயன்மார்கள் ஐம்பொன் திருமேனி கொண்ட, 12 சிவத்தலங்களில் ஒன்றா கவும் இத்தலம் விளங்குவது, மற்றொரு சிறப்பாகும். மேலும் இக்கோவிலில் உள்ள, ஐந்து தேர்களில் வரும், 23ம் தேதியன்று, விநாயகர், சுப்பிரமணியர், ஸ்வாமி, அம் பாள் ஆகிய, நான்கு திருத்தேர்கள் வீதியுலாவும், வரும், 24ம் தேதியன்று சண்டிகேசுவரர் தேர் வீதியுலாவும் நடக்கிறது. இத்தகைய சிறப்புடைய இக்கோவிலில் மங்களாம்பிகை உடனு றை ஆதிகும்பேசுவரஸ்வாமிக்கு மாசி மக பெருந்திருவிழா வரும், 15ம் தேதி இரவு பூர்வாங்க பூஜைகளுடன் ஆரம்ப மாகிறது. வரும், 16ம் தேதி காலை, 11.45 மணிக்கு மேல், 12.30 மணிக்குள் கொடி யேற்றத்துடன் விழா துவங்குகிறது. அன்று இரவு இந்திர விமானத்தில் வீதியுலா நடக்கிறது. அதைத்தொடர்ந்து வரும், 27ம் தேதி வரை நடக்கவுள்ள விழா நாட்களில், சேஷ, கமல, பூத, கிளி, யானை, மூஷிகம், மயில், ரிஷபம், ஓலைச்சப்பரம், கைலாச, குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் வீதி யுலா நடக்கிறது. இவ்விழாவில், குறிப்பாக இக்கோவி லில் உள்ள, ஐந்து திருத்தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், ஸ்வாமி, அம்பாள் ஆகிய, நான்கு திருத்தேர்கள் வரும், 23ம் தேதியன்று காலை, 7.30 மணிக்கு மேல், 8 மணிக்குள்  ஸ்வாமி திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு, தேரோ ட்டம் நடக்கிறது. வரும், 24ம் தேதிய ன்று சண்டிகேசுவரர் தேரின் தேரோட்டம் நடக்கிறது. வரும், 25ம் தேதியன்று மதியம், 12 மணிக்கு மேல், 1 மணிக்கு ள்ல, வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்வாமிகள் மகாமக குளத்தில் எழுந்தருளி யவுடன், மாசி மக தீர்த்த வாரி நடக்கிறது. வரும், 27ம் தேதி விடையாற்றி விழாவுடன், விழா றைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar