Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செங்கோடு தீர்த்தக்குட ... விநாயகர், கைலங்கிரி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சேஷ்டியில் நாளை சனி பிரதோஷ விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
10:02

பஞ்சேஷ்டி: இந்த ஆண்டின் முதல் சனி பிரதோஷ விழா, நாளை பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த, பஞ்சேஷ்டி ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள சுயம்பு லிங்கத்தை, அகத்திய முனிவர் பல காலமாக வழிபாடு செய்ததால்,  அகத்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்திரன், இந்திராணி, விஸ்வரூபன் போன்ற தேவர்கள் அகத்திய முனிவருடன் பஞ்சேஷ்டியில் தங்கியிருந்து பிரதோஷ பூஜைகள் செய்து, பிரதோஷ விரதத்தை கடை பிடித்ததால், அகத்திய முனிவரால், அவர்களுக்கு சாப விமோசனம் கிடைத்தது. பிரதோஷ மகிமை கொண்ட பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் பஞ்சேஷ்டியும் ஒன்று. பிரதோஷ காலத்தில், இங்கு வந்து பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ பெருமானை மனமுருக தரிசிப்பவர்களுக்கு, எந்த குறையும் ஏற்படாதபடி, இறைவன் நம்மை காப்பதாக ஐதீகம். வங்க கடல் அருகே அமைந்துள்ள, முக்கிய சிவ தலங்களில் பிரதோஷ பூஜைக்கு பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் பஞ்சேஷ்டி தலமாகும். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ விழா சிறப்பானது. நாளை இந்த ஆண்டின் முதல் சனி பிரதோஷம் என்பதால், ஏராளமான பக்தர்கள் பஞ்சேஷ்டி கோவிலின் பிரதோஷ விழாவில் கலந்து கொள்வர். இதேபோன்று கவரைப்பேட்டை அருகே, அரியதுரை வரமூர்த்தீஸ்வரர், புதுகும்மிடிப்பூண்டி சந்திரசேகரேஸ்வரர், கோவில்களில் சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

சுருட்டப்பள்ளி: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், நாளை சனி பிரதோஷ விழா நடைபெறுகிறது. உருவ ரூபத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இக்கோவிலில், சிவபெருமான் உலகை காக்க, ஆலகால விஷத்தை உண்டு மயக்க நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar