Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில்களில் சொற்பொழிவு சித்திரை 1ம் ... பாரி வேட்டை விழாவிற்காக அங்காள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரண்டாயிரம் ஆண்டு பழமையை பிரதிபலிக்கும் கேரள கோயில்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2013
11:03

சென்னை: ""கேரள கோயில்கள், இரண்டாயிரம் ஆண்டு பழமையை பிரதிபலிப்பதாக உள்ளன, என, தொல்லியல் துறை, முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறினார்.சென்னை, பெசன்ட் நகரில் உள்ள தமிழ் ஆர்ட்ஸ் அகடமியில், "கேரள கோயில்களின் சிறப்புகள் குறித்து, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி பேசியதாவது:கேரள மாநில கோயில் அமைப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டு முறைகள், வேறு எங்கும் காண முடியாத தனித்தன்மை பெற்றவை. இயற்கை சூழலில், கோயில்கள் தூய்மையாக பாதுகாக்கப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், கோயில்களின் வழிபாடுகள் எப்படி இருந்ததோ, அப்படியே, தற்போதும் தொடர்கின்றன.தனி சிறப்புகேரளா, மலைப்பகுதி என்பதால், ஏராளமான அரிய கற்கள் இருந்த போதிலும், செங்கல், மரம், உலோகம், ஓடுகள் கொண்டே, கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன. கோயிலின் உள் வேலைப்பாடுகள், மரத்தால், மிக நுணுக்கமாகவும், தத்ரூபமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மர வேலைப்பாடுகளில், கேரள கலைஞர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதை அறியலாம்.கேரள கோயில் நுழைவாயில் முன், மிக உயரமான விளக்கு ஒன்று அமைப்பது மரபு. இது, 15 அடி உயரமும், பல அடுக்குகள் கொண்டதாகவும், கீழே, ஆமை ஒன்றின் முதுகில் இருந்து, எழும்புவதாக அமைத்திருப்பர். இந்த நுழைவாயில் அமைப்பு, வேறு எங்கும் காண முடியாத தனி சிறப்பு வாய்ந்தது.நுழைவாயில் உச்சியில், அந்தந்த கோயிலுக்கு உரிய வாகனங்கள் இருக்கும். சிவன் கோயிலில், நந்தியும், பெருமாள் கோயிலில், கருடனும், வாகனங்களாக வைக்கப்பட்டு உள்ளன.கோயில் கொடி மரத்தின் கீழ், உலோகத்தால் ஆன, எட்டு தெய்வங்களின் உருவங்கள் இருக்கின்றன. மன அமைதி கோயில் திருச்சுற்றுகளில் இயற்கை மண்ணையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கோயில் திருச்சுற்றுக்குள், தேவையற்ற, புதுக்கட்டடங்களை எழுப்புவதில்லை.இது போன்ற தனித்தன்மை வாய்ந்த பல அம்சங்கள், கேரளத்து கோயில்களில் காண முடிகிறது. இயற்கை சூழலுடன், பழமையான வழிபாட்டு முறைகளும், கேரள கோயில்களில் காணப்படுவதால், பக்தர்களுக்கு மன அமைதியை தருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar