பதிவு செய்த நாள்
16
ஏப்
2013
10:04
உடுமலை: உடுமலை நேருவீதி காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவ விழா இன்று துவங்குகிறது. இக்கோவிலில் விழா இன்று (16ம் தேதி) நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. வரும் 23ம் தேதி காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜை, காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை முளைப்பாலிகையிடுதல், கொடியேற்றுதல், பிற்பகல் 11:30 மணிக்கு தீர்த்தம் கொண்டு வர திருமூர்த்தி மலை புறப்படுதல், மாலை 4:00 மணிக்கு கும்பஸ்தாபிதம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 24ம் தேதி காலை 9:15 மணிக்கு மாரியம்மனுக்கு திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு காமாட்சியம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் குட்டை விநாயகர் கோவிலிலிருந்து கொண்டு வருதல் நிகழ்ச்சியும்; இரவு 8:00 மணிக்கு இன்னிசை பாட்டு மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது. 25ம் தேதி காலை 9:30 மணிக்கு காமாட்சியம்மன்- ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வுகள் துவக்கம், பிற்பகல் 11:30 மணிக்கு திருமாங்கல்ய தாரணம், 11:45மணிக்கு மகா தீபாராதனையும்; மாலை 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, இரவு 8:00 மணிக்கு பட்டிமன்றமும் நடக்கிறது. 26ம் தேதி காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு மகாபிஷேகம், மாலை 5:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம், மாலை 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, இரவு 8:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.