திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.13 லட்சம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2013 10:05
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உள்ள உண்டியல்கள், இந்து அறநிலைய துறை உதவி கமிஷனர் ரோசாலிசுமதா, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் மாரிமுத்து, ஆகியோரது மேற்பார்வையில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. 10 லட்சத்து 7 ஆயிரத்து 269 ரூபாய், தங்கம் 138 கிராம், வெள்ளி 462 கிராம் இருந்தது. மொத்தம் 13 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.