பதிவு செய்த நாள்
22
மே
2013
11:05
கும்பகோணம்: ஆதிகும்பேசுவர ஸ்வாமி கோவிலில், திருக்கல்யாண திருவிழா நேற்று முன்தினம் காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். பல்வேறு சிறப்புகளை கும்பகோணம் ஆதிகும்பேசுவர கோவிலில், திருக்கல்யாண திருவிழா, கடந்த, 19ம் தேதி துவங்கியது. அன்று இரவு, 7 மணிக்கு, அம்பாள் தவக்கோலம், பெருமாள் காட்சியளித்தல், நிச்சயத்தாம்பூலமும் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை ஆதிகும்பேஸ்வர ஸ்வாமிக்கும், மங்களாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளனமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு, 7 மணிக்கு திருமண மறைச்சடங்கு, நலுங்கு, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. வரும், 24ம் தேதி திருக்கோவிலிலிருந்து ஸ்வாமி அம்பாளுடன் புறப்பட்டு, காலை, 10.30மணிக்கு மணிக்கு மேல், 12 மணிக்குள், சங்கரமடத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது. பின்னர் இரவு திருக்கோவிலுக்கு திரும்ப எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும், 25ம்தேதி மஹா சுத்தாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி கமிஷனர் மாரியப்பன், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.