Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவாமி விவேகானந்தர் ரதம்பல ... ரூ.80 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்திருநகரில் ஆதிநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2013
10:06

ஸ்ரீவைகுண்டம்: நவதிருப்பதிகளில் பிரதம திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. நவதிருப்பதிகளில் பிரதம திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 30ம் தேதிமாலை அலங்கார திருமஞ்சணத்தோடு துவங்கியது. தொடர்ந்து இரவு யஜமானவரணம், ஆசார்யவரணம், அனுக்ஜை, விஷ்வக்சேன ஆராதனம், புண்யாக வாசனம், பஞ்சகவ்ய சம்மேளனம், ரக்ஷாபந்தனம், மிருதீசங்கரஹனம், யாகசாலை ஆவாகானம், சுவாமிகள், யாகசாலை கூட்டத்திற்கு எழுந்தருளல் நடந்தது.தொடர்ந்து காலை, மாலை யாகசாலை பூர்ணாகுதி, வேதபாராயணம் கோஷ்டி நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 4 மணிக்கு விஸ்வரூபதரிசனத்துடன் யாகசாலை துவங்கியது. 5 மணிக்கு மகா பூர்ணாகுதி, 6 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 6.21 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 6.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் பெரியசன்னதிக்கு எழுந்தருளி திருவராதனம், தளிகை அமுது செய்தல், அச்சதை ஆசிர்வாதம், கோஷ்டி மரியாதைகள் நடந்தது. இரவு சிறப்பு கருடசேவை நடந்தது.விழாவில் ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், முன்னாள் காவல்துறை தலைவர் மாசானமுத்து, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா, வெங்கிடாச்சாரி, டிவிஎஸ் மேலாளர்கள் ரெங்கநாதன், செல்வம், ஆலோசகர் முருகன், ஆர்யாஸ் நிறுவன அதிபர் பாபு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், இந்திய கலாசார பண்பாட்டு அறக்கட்டளையின் டி.வி.எஸ்.நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar