Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆழ்வார்திருநகரில் ஆதிநாதர் கோயில் ... ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பூச்சொரிதல் விழா! ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.80 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2013
10:06

திருப்பூர்: கோவிலுக்கு சொந்தமான, 80 கோடி ரூபாய் மதிப்பிலான, 24.42 ஏக்கர் நிலத்தை, அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, கொண்டரசம்பாளையத்தில், வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலுக்கு சொந்தமாக, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால், கோவிலில் ஒரு வேளை பூஜைக்கு கூட வழியில்லை. கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, அனுபவித்து வந்தனர். பலர், தங்கள் பெயருக்கு பட்டா மாறுதலும் செய்துவிட்டனர். கோவிலுக்கு சொந்தமாக, சித்தராவுத்தன்பாளையம் கிராமத்தில், 24.42 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு, 80 கோடி ரூபாய். இந்நிலங்களை மீட்க, ஐந்து ஆண்டுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று, போலீஸ் பாதுகாப்புடன், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆனந்த் தலைமையில், செயல் அலுவலர்கள் நந்தகுமார், யுவராஜ், சரவணபவன், சங்கரன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அறநிலைய துறை ஊழியர்கள், கோவில் நிலங்களை மீட்டனர். கம்பி வேலி அமைத்து, அறிவிப்பு பலகைகளும் வைத்துள்ளனர். இதேபோல், தாராபுரம் பகுதியிலுள்ள மற்ற கோவில் நிலங்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar