சூரியவழிபாடு தனி மதமாக சவுரம் என்ற பெயரில் அக்காலத்தில் இருந்தது. ஆனால், சூரியன் மற்ற மதங்களின் தெய்வ வழிபாட்டுடன் கலந்து விட்டதால் பரிவார தெய்வமாக மாறி, சைவக் கோயில்களுக்கும் வந்துவிட்டார். நவக்கிரகங்களின் நாயகனாகவும் அவரை மாற்றிவிட்டதால், நவக்கிரக மண்டபத்துடன் நின்றுவிட்டார். பெரிய சிவாலயங்களில் இவருக்கு தனி சந்நிதி இருந்தாலும், குறிப்பிடும் அளவு வழிபாடு இல்லாமல் போய்விட்டது.