கம்மாபுரம்:ஏ.வல்லியம் மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடக்கிறது. கம்மாபுரம் அடுத்த ஏ.வல்லியம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி காலை 9:00 மணிக்கு காப்பு கட்டி துவங்கியது. தினமும், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா, மகாபாரத கதைப் பாட்டு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. (8ம் தேதி) காலை 8:00 மணிக்கு அரவான் களபலி நிகழ்ச்சி, பகல் 3:00 மணிக்கு படுகளம், மாலை 5:00 மணியளவில் தீ மிதி உற்சவம் நடக்கிறது. 9ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.