பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
11:07
கரூர்: பண்டரிநாதன் கோவிலில் பக்தர்கள் மூலவரை தொட்டு வழிபடும் நிகழ்ச்சி வரும்,19ம் தேதி நடக்கிறது.சில கோவில்களில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் சர்வ ஏகாதசியன்று ஆண், பெண், குழந்தைகள் என, அனைவரும் கர்ப்பகிரகத்துக்குள் சென்று, மூலவரைத் தொட்டு வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி கரூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள பண்டரிநாதன் கோவிலில் வரும்,19ம் தேதி, காலை முதல், இரவு வரை, மூலவரை தொட்டு வழிபாடு நடக்கிறது. மேலும், 18ம் தேதி மாலை துக்காரம் கொடி புறப்பாடும், 19ம் தேதி, காலை, 7 மணிக்கு அபிஷேகம், மாலை, 4 மணிக்கு பஜனை, 6.30க்கு வீதியுலா, 20ம் தேதி காலை அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி ஆகியவை நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குணசேகரன், கவுரவ தலைவர்கள் மேலை பழனியப்பன், ஜெகநாதன், ஆடிட்டர் முத்துராமன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.