பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
11:07
ஓசூர்: ஓசூர் ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ ஸ்ரீ விஜய விநாயகர் கோவில் மற்றும் மூன்றாம் நிலை ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.இக்கோவில் புனரமைக்கப்பட்டு, புதிதாக மூன்று நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த புனரமைக்கப்பட்ட கோவில் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழா கடந்த, 12ம் தேதி துவங்கி, தினம் சிறப்பு அபிஷேக பூஜைகள், நவக்கிரஹ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி பூர்ணாஹூதி ஆகியவை நடந்தது. அன்று காலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாஹவசனம், தேவதா அனுக்ஜை மற்றும் ஹோமமங்கள், பூதஜைகள் நடந்தது. மாலை தீபராதனை, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 13ம் தேதி வேதபாராயணம், விக்னேஷ்வர பூஜை, திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, ஓம திரவியம், மகா பூர்ணாஹூதி தீபாராதனை ஆகியவை நடந்தது. மாலை தீபாராதனை, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.நான்காம் கால பூஜை, துவார பூஜை, நாடிசந்தானம், யாத்ராதானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் காலை முதல் மாலை வரை நடந்தது. நேற்று முன்தினம் காலை கும்பாபிஷே விழாவையொட்டி துவாரபூஜை, வேசேஷ திரவியம் ஹோமம், மஹா பூர்ணாஹூதி தீபராத;னை, விக்னேஷ்வர பூஜை ஆகியவை நடந்தது.காலை, 10 மணிக்கு மூன்று நிலை ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியர்கள், ராஜகோபுரம் கலசத்தில் புனித தண்ணீர் ஊற்றினர். 10.15 மணிக்கு மூலாலய கும்பிஷேகத்தை தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம், அலங்காரம், மஹா தீபராதனை, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, சம பந்தி போஜனம், அன்னதானம் நடந்தது.ஓசூர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கலந்து கொண்டனர். இரவு இன்னிசை கச்சேரி, நடந்தது. கவுன்சிலர்கள் சக்திவேல், எல்லோராமணி, தி.மு.க., நகர செயலாளர் விஜயகுமார், ராஜேந்திரன், குடியிருப்போர் சங்க தலைவர் சத்தியமூர்த்தி, சுகுமார், டென்னீஸ், ராஜூ உட்பட பலர் கலந் கொண்டனர்.ஏற்பாடுகளை கவுன்சிலர் சக்திவேல், திருப்பணி குழு தலைவர் வேலுமணி, செயலாளர் கணபதி, பொருளாளர் குமரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.