பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
11:07
மத்திய பிரதேசத்தில், பள்ளிப் பாடப் புத்தகங் களில், பகவத் கீதையின் சில பகுதிகளைப் பாடமாகச் சேர்க்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 2013-14ம் கல்வி ஆண்டிலேயே, இது அமலுக்கு வருகிறது. ம திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி உள்ளது. மாநிலத்தில், பள்ளி மாணவர்களுக்கு நற்சிந்த னைகளை வளர்க்கும் வகையிலும், நல்ல கருத்துகளை போதிப்பதற்காகவும், பள்ளிப் பாடப் புத்தகத்தில், இந்துக்களின் புனித நூலான, பகவத் கீதையின், சில பகுதிகளைச் சேர்க்க, சவுகான் அரசு திட்டமிட்டது. இதையடுத்து, 9, 10, 11, 12ம் வகுப்பு களுக்கான, "சிறப்பு இந்தி பாடப் புத்தகத்திலு<ம், 11, 12ம் வகுப்புகளுக்கான, "சிறப்பு ஆங்கிலம் பாடப் புத்தகத்திலும், பகவத் கீதையின் சில முக்கியப் பகுதிகளைப் பாடமாகச் சேர்க்க, ம.பி., மேல்நிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.