Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விவேகானந்தர் பிறந்தநாள் ... கும்பாபிஷேகம் !
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.5 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு: அறநிலையத்துறை அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
11:07

காங்கயம்: காங்கயம், சிவன்மலை கோவிலுக்கு, சொந்தமான, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறையினர் மீட்டனர்.திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 10.07 ஏக்கர் நிலம் உள்ளது. அரசு உத்தரவுபடி, கோவில் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்த போது, இது,கோவிலுக்கு சொந்தமான நிலம் என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, நேற்று, அங்கு சென்ற, அறநிலையத்துறை அதிகாரிகள் நிலத்தை மீட்டு, கோவிலுக்கு சொந்தமான இடம் என, அறிவிப்பு பலகை வைத்தனர். சம்மந்தப்பட்ட நிலத்தை, மூன்று பேர் ஆக்கிரமித்திருந்ததோடு, வருவாய்த்துறை சப்டிவிஷன் செய்த ஆவணம் உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து,கோவில் அதிகாரிகள் கூறுகையில், "கோவிலுக்கு சொந்தமான நிலம் என, ஆவணம் உள்ளது. அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆவணங்கள் முறைகேடாக மாற்றப்பட்டிருந்தாலும், அறநிலையத்துறையை கட்டுப்படுத்தாது என்றனர். செயல் அலுவலர் நந்தகுமார் கூறியதாவது: கோவில் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களில், கோவில் பெயரில், 10 ஏக்கர் நிலம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அருகில், தனியார் நிலம் உள்ளதால், அந்த ஆவணங்களை வைத்துக்கொண்டு, கோவில் நிலத்தையும் அனுபவித்து வந்துள்ளனர். ஆவணங்களின் அடிப்படையில் நிலம் மீட்கப்பட்டுள்ளது; வருவாய்த் துறையினரிடம் நிலம் குறித்த, அனைத்து ஆவணங்களையும் கேட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar