ராவணன் இறந்ததும், அவனுடைய மனைவி மண்டோதரி கதறி அழுதாள். வாழ்வில் நன்மை செய்தவன் நற்கதி அடைகிறான். தீமை செய்தவன் கீழ்நிலை பெறுகிறான். விபீஷணன் ராமனோடு சேர்ந்து நற்கதி பெற்றான். நீங்கள் தீமை செய்து மாண்டு விட்டீர்களே! என்று கதறினாள். அவளுக்கு எதிரில் மரவுரியும், ஜடையும் தரித்த ராமன் வில்லேந்தி நின்றார். அவரைப் பார்த்ததும் பரமாத்மா என்றாள். மனிதனாக வாழ்ந்த ராமனை ராமாயணத்தில் பரமாத்மா என்று கடவுளாக வணங்கிய ஒருத்தி இவள் மட்டுமே. பதிவிரதையான மண்டோதரிக்கு மட்டும் இந்த ரகசியம் தெரிந்தது. தன்னுடைய பரதத்துவத்தை (கடவுள் நிலையை) ராமனால் மண்டோதரியிடம் மறைக்க முடியவில்லை. ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில் வால்மீகி, ராமன் பரமாத்மா என்ற ரகசியத்தை மண்டோதரி மூலம் மட்டுமே வெளிப்படுத்துகிறார்.