கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுருசாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பிரதோஷ பூஜை நடந்தது.சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமிகள் கோ யில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.