Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  சபரிமலையில் சித்திரை விஷு கனி ... பாலமேடு பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா: பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக்கடன் பாலமேடு பத்ரகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா: கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா: கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
10:04

  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருப்பூர் ஒன்றியம்,தொரவலுார் ஊராட்சியில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா, பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடந்தது. பொங்கல் திருவிழா கடந்த மாதம் 23ல் சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் (7ம் தேதி) இரவு அவரபாளையத்தில் இருந்து சக்தி கரகத்துடன், மேள தாளங்கள் முழங்க சுவாமியின் படைக்கலம் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டது. நேற்று மதியம் பொங்கல் விழா நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று குடியேறிய ஏராளமான மக்கள், தங்கள் பூர்வீகக் கோவிலான கோட்டை முனியப்ப சுவாமி கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு வழிபட்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக 700-க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி சுவாமிக்குப் படைத்தனர்.


ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்ப சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 142 கிடாக்களின் இறைச்சி ராட்சத அண்டாக்களில் சமைக்கப்பட்டன. இதற்காகப் பக்தர்கள் வழங்கிய இரண்டு டன் அரிசி பயன்படுத்தப்பட்டது. 150 சமையல் பணியாளர்கள் இரவு பகலாக இப்பணியில் ஈடுபட்டு, ஊர் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் கறி விருந்துடன் அன்னதானம் வழங்கினர். நாளை மஞ்சள் நீராட்டுதல் மற்றும் மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளைத் தக்கார் சபரீஷ்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar