Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரநகர் ஹயக்ரீவருக்கு நாளை ... தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் தங்கத்தேர் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
11:08

கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் தங்கத்தேர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் மலைப்பாதை அமைக்கப்பட்டு கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனிடையில் பக்தர்களின் 7ம் படைவீடாக வழிபட்டு வரும் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் தங்கத்தேர் அமைத்திட வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இதற்கான பணிகள் உபயதாரர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர் ஓடுவதற்கான ஓடுதளம் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தங்கத்தேருக்கான மரத்தேரும் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் தேரில் செப்பு தகடுகள் பொருத்தியிருந்த பணியினை தமிழக இந்து சமய அறநிலையத்துறை செந்தூர்பாண்டியன் பார்வையிட்டு, கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தங்கத் தேர் பணிகளையும் பார்வையிட்டார். இதனையடுத்து தற்போது கோயிலில் தங்கதேர் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் விநாயகர் சதூர்த்தியன்று தங்கத்தேரை இயக்கிடும் வகையில் பணிகள் மும்முரமடைந்துள்ளது. தங்கத்தேர் பணிகுறித்து முன்னாள் திருப்பணிக்குழுதலைவர் அருணாசலம் கூறுகையில், ""திருமலைக்கோயில் தங்கதேர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தங்கத் தேரினை சிறப்பிக்கும் வகையிலும், பக்தர்களின் வேண்டுகோளையடுத்தும் தேரில் பக்தர்களுக்கு காட்சி தரும் முத்தையனுக்கு தங்க அங்கியும் அணிவிப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று பக்தர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் கோயிலில் தங்கத்தேர் ஓடும் வகையில் அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar