Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழியில் பொங்கல்; மதுரையில் ...  சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள் 4 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
 காரமடை அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

30 டிச
2025
05:12

மேட்டுப்பாளையம்:வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோயில். கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் கடந்த, 20ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் அரங்கநாதர் சுவாமி முன், கோயில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் பாசுரங்களை பாடி வந்தனர். 29ம் தேதி இரவு நாச்சியார் திருக்கோலத்தில் அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார்.

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை, 3:00 மணிக்கு கோயில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. பின்பு உற்சவர் அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.சிறப்பு பூஜை செய்த பின் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. காலை, 5:45 மணிக்கு வாசல் முன்பு நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர் ஆகிய மூன்று ஆழ்வார்கள் எதிர்கொண்டு அரங்கநாத பெருமாளை சேவித்தனர். பின்பு மூன்று ஆழ்வார்களுக்கும் சடாரி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின் சொர்க்கவாசல் வழியாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பெருமாளை வழிபட்டனர். தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில், பல்வேறு சமூகத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். அந்த பந்தலில் சுவாமியை நிறுத்தி அந்தந்த சமூகத்தினர் சிறப்பு பூஜை செய்து, சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பேபி ஷாலினி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் ஆகியோர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar