திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உள்ள, எட்டு பிரார்த்தனை உண்டியல்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. 11 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய், தங்கம் 102 கிராம், வெள்ளி 603 கிராம் இருந்தது. இந்து அறநிலைய துறை உதவி கமிஷனர் ரோசாலிசுமதா, ஆய்வாளர் லட்சுமிமாலா, கண்காணிப்பாளர் மாரிமுத்து, கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.