பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை ஒட்டி, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், மத்திய அரசு, 120 புதிய பஸ்களை, திருமலை மற்றம் திருப்பதியின் டிப்போக்களுக்கு அளித்துள்ளதாக, ஆந்திர மாநில போக்குவரத்து கழகத் தலைவர் ஏ.கே.கான் தெரிவித்து உள்ளார். திருமலைக்கு, 133; திருப்பதிக்கு, 155 புதி"ய பஸ்கள் வழங்க வேண்டும் என, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ,ஆக் 3, முதல்கட்டமாக, 120 புதிய பஸ்கள் அளிக்கப்பட்டு உள்ளன. இதில், 90 பஸ்கள் திருமலையின் மலைப் பாதையில் பயணிக்க வசதியாக, 9.5 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 42 இருக்கைகளுடன், தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பஸ்களை நிறுத்த, திருப்பதி பஸ் நிலையம் அருகில், 1.1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.