பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
காரிமங்கலம்: காரிமங்கலம் லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில், புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு அக்.,5 சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காரிமங்கலம் கடைவீதி அக்ரஹாரம் ஸ்ரீ லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், கோவில் குருக்கள் பிரகாஷ், மோகன்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.
* காரிமங்கலம் அடுத்த கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில், பிக்கனஹள்ளி சென்றாய ஸ்வாமி மலைக்கோவில், தேவர்முக்குளம் ரங்கநாதர் ஸ்வாமி கோவில் ஆகியவற்றில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
* தர்மபுரி கோட்டை பரவாசுதேவர் கோவில், கடைவீதி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், கெரகோடஅள்ளி ஸ்ரீ வீரதீர விவேக ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.அனைத்து பெருமாள் கோவில்களிலும் மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளிக்கவசம் சாத்துதல் ஆகியவை நடக்கிறது.