பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், நவராத்திரி விழா சிறப்பு பூஜை அக்., 5 துவங்குகிறது.காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அக் 5 முதல் வரும், 13ம் தேதி வரை தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அக் 5 முதல் வரும், 13ம் தேதிவரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
* தர்மபுரி கோட்டை ஸ்ரீ மல்லகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள காமாட்சி அம்மனுக்கு அக் 5 முதல், 13ம் தேதிவரை காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஒன்பது நாட்களிலும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.* தர்மபுரி வெளிப்பேட்டை தெரு, அங்காளம்மன் கோவில், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உட்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.