பதிவு செய்த நாள்
14
அக்
2013
10:10
திருப்பாச்சேத்தி: ஆயுதபூஜையை முன்னிட்டு, திருப்பாச்சேத்தி அரிவாள்களுக்கு, அரிவாள் தயாரிக்கும் தொழிலாளர்கள் பூஜை செய்து வணங்கினர். சிவகங்கை மாவட்டத்தில், அரிவாள் தயாரிப்பிற்கு பெயர் பெற்ற ஊர் திருப்பாச்சேத்தி. பல ஆண்டுகளாக இக்கிராமத்தினர், அரிவாள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயத்திற்கு தேவைப்படும் பன்னரிவாள், அரிவாள், காவல் தெய்வங்களுக்கு நேர்த்தி செலுத்துவது உட்பட பல்வேறு பயன்பாட்டிற்காக, அரிவாள் தயாராகிறது. குறைந்தது 7 முதல் அதிகபட்சம் 18 அடி உயரம் வரை அரிவாள் தயாரிக்கப்படும். பரம்பரை பரம்பரையாக பல குடும்பத்தினர், அரிவாள் தயாரிக்கும் தொழிலில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். நேற்று ஆயுதபூஜைக்காக, அரிவாள் தயாரிக்கும் பட்டறைகளில், தொழிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, புதிதாக தயாரிக்கப்பட்ட அரிவாள்களை சுத்தம் செய்து, அடுக்கி வைத்து, பூஜை செய்தனர்.