Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சானூர் பத்மாவதி தாயார் ... சிவசைலம் கோயிலில் 30ம்தேதி திருக்கல்யாணம்! சிவசைலம் கோயிலில் 30ம்தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி அருகே அம்மன் சிலை திருடிய 3பேர் கைது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 அக்
2013
10:10

தென்காசி: தென்காசி அருகே குறி சொல்ல அம்மன் சிலையை  திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஓருவரை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசியை அடுத்த இடைகால் சின்னப்பனையன்குளத்தில் உள்ள முப்புடாதியம்மன் கோயிலில் கடந்த மாதம் 29ம் தேதி காளியம்மன் கல் சிலை ஒன்று திருடு போனது. இதையடுத்து ஊர் சமுதாய தலைவர் ”ப்பிரமணியன் இலத்தூர் போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடியவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சப்- இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் நேற்று இலத்தூர் விலக்கு அருகே ரோந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப் போது சந்தேகப்படும்படியாக சென்ற தென்காசி மலையான் தெருவை சேர்ந்த பட்டமுத்து மகன் முத்துபாண்டி (42), மடத்தூரைச் சேர்ந்த எபனேசன் மகன் கண்ணன் (44), கீழப்புலியூரை சேர்ந்த தம்பிரான் மகன் சேது(28) ஆகியோரிடம் விசாரித்ததில் அவர்கள் இந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பது தெரிவந்தது.  தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், முத்துப்பாண்டி இடையன்குளத்தில் ஒரு கோயிலில் குறி சொல்லி வந்தார். அதில் வருமானம் வரவில்லை. அவரது நண்பர்கள் சிலர் ஒரு அம்மன் சிலையை வைத்து குறி சொன்னால் நிறையபேர் வந்து குறி கேட்பர் .அதனால் வருமானம் பெருகும் என ஆசை வார்த்தை கூறினர்.இதனால் அவர்களுடன் சேர்ந்து சின்னப்பனையன் குளத்தில் திருட்டில் ஈடுப்பட்டதும், திருட்டிற்கு ஆட்டோவை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3பேரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் கீழப்புலியூரை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் புலிப்பாண்டியும் இவ்வழக்கில் ஈடுபட்டிப்பது தெரிவந்தது. தலைமறைவான புலிப்பாண்டியை போலீசார்தேடி வருகின்றனர். திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar