Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காட்டில் காஞ்சிப்பெரியவர்! நினைத்தாலே புண்ணியம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் கூடாது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2013
04:10

*உயிர்களின் மீது அன்பு காட்டி வாழ்வதே கடவுளின் மீது செலுத்தும் உண்மை அன்பாகும். உயிர்களுக்கு உதவி செய்பவனைக் கண்டால் கடவுள் அளவில்லா மகிழ்ச்சி கொள்கிறார்.
*ஒருமுகப்பட்ட மனதுடன் கடவுளின் மலர்ப்பாதத்தை நினைக்கின்ற நல்லவர்களோடு உறவாடுங்கள்.
*கோல் சொல்லி குடும்பத்தைப் பிரிப்பது, கலங்கி நிற்போரைக் காட்டிக் கொடுப்பது, ஆசை காட்டி தீங்கு இழைப்பது போன்ற தீமைகளை யாருக்கும் செய்யக்கூடாது.
*நீதியும், நேர்மையும் மனதில் நிலைக்கச் செய்யுங்கள். கருணையில்லாத மனிதர்களை விட்டு விலகுங்கள்.
*உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றுமாக கபடமாக பேசுபவர்களிடம் பழகாதீர்கள்.
*உண்மையைப் பேசுங்கள். அதுவே உங்களின் வார்த்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.
*எல்லாருக்கும் உணவு கிடைக்க வேண்டும். உணவு இல்லை என்ற சொல் மாறி, பசி இல்லை என்று சொல்ல வேண்டும்.
*யாருடைய உள்ளத்தில் தயவு, கருணை இருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார். கருணை இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாதவரே.
*நல்லவர்களின் மனதை நடுங்கச் செய்வது, வலிய வழக்கு போட்டு மானத்தைக் கெடுப்பது, நல்ல நண்பர்களைப் பிரிப்பது, தானம் கொடுப்பதை தடுப்பது இவை அனைத்தும் பெரும்பாவம்.
*பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள். தவம் செய்யும் ஞானியரை கை கூப்பி வணங்குங்கள். கடவுளை எப்போதும் தியானியுங்கள்.
*கடவுளுக்குச் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அந்த பணத்தை ஏழைகளின் வயிற்றுப் பெட்டியில் நிரப்புங்கள்.
*பிறர் குற்றங்களில் கருத்தைச் செலுத்தாதீர்கள். எந்தக் குற்றமும் செய்யாத படி உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள்.
*மனிதப்பிறவி எடுத்து இந்த உலகிற்கு வந்து விட்டோம். நாம் செய்ய வேண்டிய நல்ல செயல்களை உரிய நேரத்தில் செய்து முடித்து விடுங்கள்.
*உறவினர்களை உபசரிப்பதும், கண்களில் கருணை பெருகச் செய்வதும், பழமையை மறவாமல் நன்றி பாராட்டுவதும் இல்லறத்தில்நம் கடமையாகும்.
*கடவுளை உண்மையுடன் வழிபட்டால் அன்றி பொய், பொறாமை போன்ற தீய பண்புகளை நம்மிடம் இருந்து அகற்ற முடியாது.
*உள்ளத்தில் கோபம் எழும்போதே அகற்றி விடுங்கள். இல்லாவிட்டால் அது பெரிய தீமையில் நம்மை ஆழ்த்தி விடும்.
*அருள் கூர்ந்த பெரியவர்களும், நல்லவர்களுமே நாட்டை ஆள வேண்டும். கொடுங்கோல் மனம் படைத்தவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்வது கூடாது.
*கடவுள் சிந்தனை அற்ற மனிதர் களின் வீட்டில் உணவு உண்பது கூடாது. பகட்டான ஆடையும், ஆடம்பர வாழ்வும் ஆன்மிக வாழ்வுக்கு எதிரானவை.
*வெள்ளம் வரும் முன் அணை போடுவது போல, தனக்குத் தானே தீய எண்ணங்கள் மனதில் புகாமல் விழிப்புடன் இருப்பதே அறிவுடைமை.
-வள்ளலார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar