Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேசுவரம் 1ம் பிரகாரத்தில் ... சிதம்பரம் திருவாடுதுறை ஆதீனம் கோவில் கும்பாபிஷேகம்! சிதம்பரம் திருவாடுதுறை ஆதீனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவிலுக்கு ரூ.3.8 கோடியில் தங்கத் தேர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 நவ
2013
06:11

காரைக்கால்: திருநள்ளார் கோவிலுக்கு ரூ.3.8 கோடியில் தங்கத் தேர் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்பில் சொர்ணகணபதி, சண்டீகேஸ்வரர், சுப்பிரமணியன் ஆகிய சுவாமிகளுக்கு தேர் செய்ய கட்டுமான பணிகளுக்கு தொடக்க விழா நடந்தது. காரைக்கால் திருநள்ளார் உலக பிரசித்துபெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் தனி சன்னதி கொண்டு சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார்.சனிக்கிழமைகளில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழாவின்போது தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தில் தியாகராஜர்,நீலோத்தாம்பால் ஆகிய தேர்கள் உள்ளது.இதனால் சொர்ணா கணபதி,சுப்பிரமணியர்,சண்டிகேஸ்வரர் ஆகிய மூன்று சுவாமிகளுக்கு தேர் இல்லாத நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேர் செய்ய கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்திவந்தனார்.பிரகாரத்தில் சுற்றி வருவதாற்கு சனீஸ்வரனுக்கு தங்க தேர் செய்ய பக்தர்கள் கூறியுள்ளனர்.இனால் கோயில் நிர்வாக சார்பில்  தங்க தேர் செய்ய முடிவு செய்துள்ளது.இதற்கு புதுச்சேரி அரசு ஒப்புதல் பெற்று ரூ.3.8 கோடியில் தங்கத் தேர் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்பில் சொர்ணகணபதி,சண்டீகேஸ்வரர்,சுப்பிரமணியன் ஆகிய சுவாமிகளுக்கு தேர் செய்ய கட்டுமான பணிகளுக்குதொடக்க விழா நேற்று திருநள்ளார் தேர் நிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீரசாமி தலைமை தங்கினார்.கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.,சிவா முன்னிலை வகித்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுவாமிநாதன்,சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். கோயில் நிர்வாக அதிகாரி கூறியது.கோவிலுக்கு தங்க தேர் செய்ய பக்தர்களின் நன்கொடையின் மூலமாக இந்த தங்க தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது.காக்க வாகனத்துடன் கூடிய தங்க தேர்,சுமார் 11 கிலோ தங்கம்,300 கிலோ காப்பர்,100 சதுர கன அடி தேக்கு மரங்களுடன் 14 அடி உயரமும்,7 அடி அகலத்துடன் அமைக்கப்பட உள்ளது.இதற்கு ஒரு கமிட்டி உள்ளது.இந்த கமிட்டி மூலம் இப்பணிகள் நடைபெறும்.தங்க தேர் செய்வதம் மூலம் திருமண ஆகாதவர்கள்,திருமணநாள், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தேர் இழுக்க விரும்புவோர்கள் கோவிலில் கட்டணத்தை செலுத்தவேண்டும்.மேலும் சண்டிகேஸ்வர் 7 அடி உயரம்,9 அடி அகலம், சொர்ண கணபதி 13 அடி உயரம்,15 அகலம்,சுப்பிரமணியர் 12 அடி உயரம்,13 அடி அகலத்தில் இழுப்ப மரத்தில் தேர் செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டது.இத்தேர் வரும் பிரமோற்சவ விழாவிற்குள் பணிகள் முடிக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என்று கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar