Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடலுக்கு தானே வயது உள்ளத்துக்கு ஏது? தமிழ் வளர்த்த தென்னவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2011
04:03

ஒழுக்கப் பயிற்சியைக் கடைபிடிப்பதுடன், நடைமுறையாக்கி கொண்டால் பல பண்புகள் நமது கட்டுப்பாட்டுக்குள் வரும். இதனை தினசரி கடமையாகச் செய்தால் படிப்படியாக வெற்றி பெற்று மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். உடல், புலன்கள், மனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறமுடியும். நற்பண்புகளை பற்றி பேசுவதால் பயனில்லை, மாறாக அவற்றை வாழ்க்கையில் கடைபிடித்து நடக்க வேண்டும்.வாக்குறுதி அளித்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். எதை கூறினாலும், அது உண்மையானதாக இருக்க வேண்டும். அதற்காக எது உண்மையோ அதனை பேச வேண்டும். உயர்ந்த பொருளைப் பெற அதிகபட்ச விலையைக் கொடுக்க வேண்டும். அதுபோல் ஒருவன் மேல்நிலையை அடைய தன்னிடமுள்ள இழிந்த குணங்களைக் கைவிட வேண்டும். உலகில் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகின்றன. அதனால் அவற்றை கொல்லவோ, துன்புறுத்தவோ, துக்கப்படச் செய்யவோ நமக்கு தார்மீக உரிமையில்லை. வாழ்க்கையில் கட்டுப்பாடு, ஒழுக்கம் இருந்தால் உயர்வடைய முடியும். ஒழுக்கப் பயிற்சியை தவறவிட்டால் வெற்றி பெற இயலாது.மற்றவர்கள் செய்வதைப் பற்றியோ செய்யாததைப் பற்றியோ ஆராய்ந்து கொண்டிருக்காமல், உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாயிருங்கள். வீட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில் எந்த விதமான பொறுப்புகளை ஏற்க வேண்டியிருந்தாலும், தடுமாறாமல் அதில் மனதைப்பதிந்து நிறைவேற்ற வேண்டும்.

நமது கடமையில் அக்கறையில்லாமல் அவற்றை மறந்து விடுகின்ற போதுதான், நமக்குள் கேடு தலை தூக்குகிறது. கடமை மீதான முழு ஈடுபாடு மனத்தூய்மையை அளிப்பதுடன், முழுமையான மன நிறைவையும் அகமலர்ச்சியையும்  அளிக்கிறது. எந்ததொழிலைச் செய்தாலும், நேர்மைப்பற்றுடன் அணுகி, கடவுளுக்கு ஆற்றுகின்ற வழிபாடாகக் கருதி, அர்ப்பணிப்புடன் நம்மை ஒப்படைத்துச் செய்து முடிக்க வேண்டும். பிறருக்கு தியாகம் செய்ய வேண்டுமே தவிர, தமது சொந்த வசதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், தமது நோக்கங்களை அடைவதற்காகவும், மற்றவர்களைப் பலியிடக் கூடாது. பிறரை பாதுகாத்து உதவிபுரிய தனது சொந்த வசதிகளையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும், தன் உயிரையும் தியாகம் செய்பவர் பெருமகனாகப் போற்றப்படுகிறான். மாணவர்கள் தமது விதியையும், தேசத்தின் தலைவிதியையும் உருவாக்குபவர்களாகத் திகழ வேண்டும். இதைச் செய்து விட்டால் அவர்கள் எதையும் நடத்திக்காட்டும் குணத்தைப் பெற்று விடுவார்கள். இது அவர்களுடைய மாபெரும் பொறுப்பாகும்.தொண்டு செய்வது என்பது ஒரு குறிப்பிட்ட செயலில் மட்டும் இல்லாமல், முழு வாழ்க்கையிலும் பரவியிருக்க வேண்டிய மனப்பான்மையாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar