கார்த்திகை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி, சீர்காழியை அடுத்த திருவெண்காடு அகோரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவெண்காட்டில் உள்ள புதன் பரிகார தலமான அகோரமூர்த்தி சுவாமிக்கு மஞ்சள்,திரவியபொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 21 வாசனை திரவியப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.