சபரிமலையில் இருமுடி கட்டாமல் 18 படி ஏற ஒரே ஒரு குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் பந்தளம் அரச குடும்பத்தினர் வாரிசுகள் ஆவர். பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்தார். மகன் வீட்டிற்கு செல்ல பெற்றோர்களுக்கு அனுமதி தேவையில்லை என்பதால் நேரடியாக 18 படிகளின் மீது ஏறி இவர்கள் ஐயப்பனை காண சென்றுவிடுவார்கள். இவர்களைத்தவிர எவ்வளவு பெரிய முக்கியஸ்தராக இருந்தா<லும் இருமுடி கட்டாமல் 18 படி ஏற அனுமதிக்கப்படுவதில்லை.