தேவகோட்டை: பிள்ளையார் நோன்பை முன்னிட்டு நேற்று சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விநாயகர் வீதி உலா சென்றார். நோன்பை முன்னிட்டு, நகராத்தார்களுக்கு நூல் வழங்கினர். நகர சிவன் கோயில் வளாக, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கைலாசவிநாயகர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.