Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில் ... கோட்டை ஈஸ்வரன் கோவில் 68ம் ஆண்டு மார்கழிப் பெருவிழா கோட்டை ஈஸ்வரன் கோவில் 68ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு ரூ.50 லட்சத்தில் புதிய தேர் அமைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 டிச
2013
10:12

தஞ்சாவூர்: பெரியகோவிலுக்கு புதிய பிரம்மாண்டமான தேர், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைப்பு பணிகள், தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, தேர் அடிப்பாகம் பொருத்தும் பணியை, சிறப்பு பூஜை நடத்தி, ஸ்தபதிகள் துவங்கினர். தஞ்சை பெரியகோவிலுக்கு பிரம்மாண்டமான புதிய தேர் செய்வதற்காக, 50 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. இதை கடந்த சட்டசபை தொடரில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து தஞ்சையில் கடந்த செப்., மாதம், 16ம் தேதி பெரியகோவிலுக்கு தேர் செய்யும் பணி துவங்கப்பட்டது. தஞ்சை மேலவீதியிலுள்ள ஸ்ரீ கொங்கணேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீ ராமர் கோவிலில் தேர் செய்யும் பணிகள், இரு பிரிவாக நடந்தது. தொடர்ந்து தற்போது ராமர் கோவில் அருகில் பெரியதாக "ஷெட் போடப்பட்டு, அதில் தேர் பாகங்கள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளில், ஸ்தபதி அரும்பாவூர் வரதராஜன் தலைமையில், ஸ்தபதிகள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து தேர் அடிப்பாகம் பொருத்தும் பணி நேற்று துவங்கியது. இதற்குரிய சம்பிரதாயப்படி, சிறப்பு பூஜை காலை, 11 மணிக்கு நடந்தது. இதில் அ.தி.மு.க., விவசாய பிரிவு மாநில செயலாளர் தங்கமுத்து, எம்.எல்.ஏ., ரங்கசாமி மற்றும் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின் ஸ்தபதி வரதராஜன் கூறியதாவது: தஞ்சை பெரியகோவில் தேரில் முதல் அங்கணம் அமைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. முதல் கட்ட பணியில், ஒன்றரை அடி உயரத்தில், 40 சிற்பங்களும், 2ம் கட்ட பணியில் இரண்டேகால் அடி உயரத்தில், 56 சிற்பங்களும், 3ம் கட்ட பணியில், ஒன்றரை அடி உயரத்தில், 56 சிற்பங்களும் செதுக்கப்படும். தரைமட்டத்தில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை, பதினாறு அரை அடி உயரத்தில் தேர் அமைக்கப்படும். ஒவ்வொரு சக்கரமும், ஆறரை அடி உயரமும், அச்சு நீளம், பதினான்கரை அடி உயரமும் உடையது. தேர் அமைப்பு பணி நிறைவடைந்தவுடன் நான்கு புறமும், 160 மணிகள் பொருத்தப்படும்,இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar