சிதம்பரம்: நடராஜர் கோயிலில் நேற்று இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். நடராஜர் கோயிலில் தேர்த்திவிழா மற்றும் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் அதன் தலைவர் மு.செங்குட்டுவன் தலைமையில் ஆயிரங்கால் மண்டபத்தை சுத்தம் செய்யும் உழவாரப் பணியில் நேற்று ஈடுபட்டனர்.