சீனிவாசநல்லூர்: சித்தர் அதிஷ்டானத்தில் நேற்று கங்காபிசேகம் நடை பெற்றது. தீர்த்த அபிசேகம் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில் நாராயணசாமி என்றழைக்கப்படும் சித்தர் சுவாமிகள் சகஸ்ரலிங்கத்திற்கு அலகா பாத்திலிருந்தும், வாரணாசியில் இருந்தும் கொண்டு வரப்பட்ட புனிதநீர், கங்கா, யமுனா, சரஸ்வதி தீர்த்த மகா அபிசேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.