Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் மண்டலபூஜைக்கு ... சபரிமலை காட்டில் 10 மணி நேரம், பம்பையில் 3 மணி நேரம்: பக்தர்கள் தவிப்பு! சபரிமலை காட்டில் 10 மணி நேரம், ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
மண்டலபூஜைக்கு பின்னர்.. சபரிமலை நடை மூன்று நாட்கள் முழுமையாக அடைப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2013
06:12

சபரிமலை: சபரிமலையில் மண்டலபூஜை முடிந்து மூன்று நாட்கள் முழுமையாக நடை அடைக்கப்பட்டிருக்கும். 30-ம் தேதி மாலையில் நடை திறந்தாலும், 31 காலையில்தான் நெய்யபிஷேகம் நடைபெறும். கார்த்திகை ஒன்றாம் தேதி தமிழகத்தை விட ஒரு நாள் முன்னதாக கேரளாவில் தொடங்கி விட்டதால் சபரிமலையில் மண்டலபூஜை நாளை மறுநாள் 26-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் 27-ம் தேதி மண்டலபூஜை என்பதால் ஏராளமான பக்தர்கள் அந்த தேதியை கணக்கிட்டு சபரிமலை பயணத்திட்டத்தை வகுத்துள்ளனர். ஆனால் 26-ம் தேதி மண்டலபூஜை முடிந்து இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டு விடும். அதன் பின்னர் 27,28,29 தேதிகளில் சபரிமலை நடை முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும். இந்த நாட்களில் துப்புரவு பணிகள் முழு வீச்சில் நடைபெறும். மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்கள் சன்னிதானத்தில் கொண்டு சேகரிக்கப்படும். மகரவிளக்கு காலத்துக்கு தேவையான அப்பம் மற்றும் அவரணை தயாரித்து சேமித்து வைக்கப்படும். இந்த மூன்று நாட்களிலும் பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானம் வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். 30-ம் தேதி காலை பத்து மணிக்கு பின்னர்தான் பக்தர்கள் பம்பையிலிருந்து மலையேற அனுமதிக்கப் படுவார்கள். எனவே தமிழகத்தில் மண்டலபூஜை தினத்தை கணக்கிலெடுத்து பயணத்திட்டம் வகுத்துள்ளவர்கள் 26-ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு முன் சன்னிதானத்துக்கு வந்து சேருவது போல் பயணத்திட்டத்தை வகுக்க வேண்டும். அல்லாத பட்சத்தில் பம்பையில் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.மகரவிளக்கு பூஜைக்காக 30-ம் தேதி மாலையில் திறக்கப்படும் நடை ஜன., 20 காலை ஏழு மணி வரை திறந்திருக்கும். 14-ல் மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. 18-ம் தேதி 11.30 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறும். 19-ம் தேதி நெய்யபிஷேகம் இல்லா விட்டாலும் பக்தர்களுக்க அன்று இரவு பத்து மணி வரை தரிசனம் நடத்தலாம். 20-ம் தேதி காலையில் பந்தளம் மன்னர் பிரதிநிதியை தவிர வேறு எவருக்கும் தரிசன அனுமதி கிடையது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த கேரள ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
சபரிமலை செல்லும் பக்தர்கள்: மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்: சென்னை: ‘‘மூளையை தின்னும் அமீபா நோய் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் தற்போது கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது. 8 மணிநேரத்திற்கு மேலாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar