Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலில் தீ விபத்து: சுவாமி ஆடைகள் ... சாரதா தேவி ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் அதியான உற்சவம் ஜன.11ல் பரமபத வாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2013
11:12

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் அதியான உற்சவம் ஜன.1ல் துவங்குகிறது. அதியான உற்சவம் 21 நாட்கள் நடைபெறும். முதல் பத்துநாட்கள் பகல் பத்தும், கடைசி பத்து நாட்கள் இரவு பத்தும் நடைபெறும். பதினொறாம் நாள் வைகுண்ட ஏகாதசியும் நடைபெறும். ஜன.1ம் தேதியன்று காலை 10 மணிக்கு,பெருமாள், ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளுவார்.பின்னர், பெருமாளுக்கும்,ஆண்டாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெறும். கோஷ்டியாக,திவ்யபிரபந்தம் பாடப்பெறும். மாலை 6 மணிக்கு, பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளல்நடைபெறும்.இவ்வாறு பகல் பத்து நாட்கள் நடைபெறும்.ஜன.10ல் திருமங்கையாழ்வார் திருவடித் தொழுதல் நடைபெறும். மறுநாள், ஜன.11ல் காலை 10 மணிக்கு திருமாமணி மண்டபத்தில்,பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சயன கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இரவு 8 மணிக்கு, பெருமாள், ராஜாங்க சேவையில் காட்சி தருவார். இரவு 10 மணிக்கு பரமபதவாசல் முன்பாக எழுந்தருள,தொடர்ந்து பரமபத வாசல் திறக்கப்படும். பரமபதவாசல் வழியாக பெருமாள் சென்று, ஏகாதசி மண்டபம் எழுந்தருளுவார். தொடர்ந்து, பத்தி உலாத்துதல், பெருமாள், தாயார் சன்னதி எழுந்தருளல் நடைபெறும். தொடர்ந்து இரவு பத்து துவங்கும். தினசரி இரவு 7 மணிக்கு தாயார் சன்னதியில், பெருமாள் எழுந்தருளி, இரவுப் பத்து நடைபெறும்.ஜன.,21 ம் தேதியன்று மாலை, நம்மாழ்வார் திருவடித் தொழுதல் நடைபெறுவதுடன் உற்சவம் பூர்த்தியடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar