Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில் ... திருக்கோஷ்டியூரில் அதியான உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் தீ விபத்து: சுவாமி ஆடைகள் சாம்பல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2013
11:12

திருச்சி: லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில், 100 டன் சுவாமி ஆடைகள் தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள, சப்தரிஷீஸ்வரர் கோவில், சிதம்பரம், தில்லை நடராஜர் கோவிலுக்கு அடுத்தப்படியாக, ஆருத்ரா தரிசனம் நடக்கும் சிறப்பு வாய்ந்தது. நேற்று மதியம், 12:30 மணிக்கு, பூஜை முடிந்து, நடை சாற்றப்பட்டது. மதியம், 1:40 மணிக்கு கோவிலிலிருந்து, பயங்கர புகை வந்தது. இதைக்கண்ட பொதுமக்கள், கோவில் அதிகாரிகளுக்கும், நிர்வாகத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். கோவிலில், சுவாமிகளுக்கு சாற்றப்பட்ட அலங்கார ஆடைகள், நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்திய பட்டுப்புடவை உள்ளிட்ட, 50 ஆண்டுகளாக செலுத்திய, 100 டன் ஆடைகள், தீப்பற்றி எரிந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தீயணைப்புத் துறையினர், இரண்டரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். ஆடைகள் முழுவதும் எரிந்த நிலையில், அருகிலிருந்த கல் தூண்கள் சேதமடைந்தன. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ராமநாதன் கூறுகையில், ""கோவிலில், குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. மின் ஒயர்களை அடிக்கடி பிய்த்து விடுகின்றன. மின் ஒயர்களை மாற்றுவது தொடர்பான மதிப்பீடு பணிகள் நடக்கும் நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது, என்றார். சுவாமி ஆடைகள் எரிந்ததால், ஏதேனும் அசம்பாவிதம் நேருமோ என, சிவபக்தர்கள் அஞ்சுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar