சுவாமி விவேகானந்தரின்,150 வது பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றி வந்த அவரது சிறப்பு ரதம் நேற்று மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்டது. விவேகானந்தரின் ரதத்திற்கு அருகில் கவுதானமந்தா ஜி,சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன்,சென்னை அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்னிடர்,சென்னை ஜெர்மனி தூதரக அதிகாரி ஸ்டீபன் வெக்பேஜ்,ஆற்காடு இளவரசர் நவாப் அலி,முன்னாள் தலைமை தேர்தல் கமிஷ்னர் கிருஷ்ணமூர்த்தி,முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பால குருசாமி,மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.