மாசாணியம்மன் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.36.64 லட்சம் வசூல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2014 12:01
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். வெளி மாவட்டங்களிலிருந்தும் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில், 16 நிரந்தர உண்டியல்களும்; இது தவிர, 6 தட்டு காணிக்கை உண்டியலும் வைக்கப்பட்டுள்ளன. மாதத்திற்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்படுவது வழக்கம்.இந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. நிரந்தர உண்டியலில், 28 லட்சத்து10 ஆயிரத்து 392 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியலில், 8 லட்சத்து 54 ஆயிரத்து 546 ரூபாயும் வசூலாகியிருந்தது. தங்கம் 228 கிராமும்,வெள்ளி 298 கிராமும் இருந்தது. உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் அனிதா முன்னிலையில் நடந்தது. கோவில் காணிக்கை எண்ணும் பணியில், கண்காணிப்பாளர், கோவில் பணியாளர்கள் உள்பட 60 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.