Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சபரிமலையில் நாளை! ஸ்ரீரங்கம் கோவிலில் முத்தங்கி அலங்காரத்தில் நம்பெருமாள்! ஸ்ரீரங்கம் கோவிலில் முத்தங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவேகானந்தர் பிறந்த நாள் விழா 150ம் ஆண்டு விழாக் குழு ஏற்பாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2014
11:01

புதுச்சேரி: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் நிறைவு விழா, வரும் 12ம் தேதியன்று, கடற்கரையில் நடக்கிறது. இதுகுறித்து, சுவாமி விவேகானந்தர் 150ம் ஆண்டு விழாக் குழுவின் தலைவர் செல்வகணபதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழா, கடந்த ஓராண்டாக, கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா, வரும் 12ம் தேதியன்று, புதுச்சேரி கடற்கரையில் நடக்க உள்ளது. காலை 9:00 மணிக்கு துவங்கி, இரவு 9:00 மணி வரை, நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விவேகானந்தரின் சிலைக்கு, முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், வாரியத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர் மலரஞ்சலி செலுத்துகின்றனர். நாள் முழுவதும், விவேகானந்தரின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் பஜனை, பக்தி இசைக் குழுவினர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, புகைப்பட கண்காட்சி, சிறப்பு சொற்பொழிவு, புதுச்சேரி ஜேசி சார்பில், விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று மேடை நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விவேகானந்தரின் பிறந்த நாளான, வரும் 12ம் தேதியன்று, வீடுதோறும் அவரது படத்தை அலங்கரித்து, புஷ்பாஞ்சலி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்களது வீடுகளில் புஷ்பாஞ்சலி செய்ய விரும்புவோர், விவேகானந்தரின் படத்தை இலவசமாக பெற்றுக் கொள்ள, 73738 70696, 99408 95150 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.சிகாகோ நகரில், நமது பண்பாடு, கலாசாரம், வேதாந்தம் போன்றவற்றை புகழ்ந்து, சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரையை நினைவுபடுத்தும் வகையில், இந்த விழாவை, சுற்றுலாத் துறையுடன் இணைந்து, 150ம் ஆண்டு விழாக் குழு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு செல்வகணபதி கூறினார்.விழாக் குழு உறுப்பினர்கள் சீனுமோகன்தாஸ், ராஜாராம், கணேஷ், பாலாஜி, ரவிச்சந்திரன், ராமன், சீனுவாசன் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
* இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்தது திருச்செந்துார். அதை இரண்டாம் படைவீடு என அழைக்கிறோம்.* ... மேலும்
 
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar