திருவட்டாறு: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு குமரி மாவட்டம் திருவட்டாறில் உள்ள 108 வைணவத் தலங்களில் ஒன்றான ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக இன்று காலையில் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து இரவு வரை நடை திறந்திருக்கும். பின்னர் சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளலும் நடைபெறுகிறது.