திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, பெயர், ஊர் தெரிவிக்க விரும்பாத பக்தர் ஒருவர், நேற்று, 35 லட்ச ரூபாயை, நான்கு, பெரிய பித்தளை பாத்திரத்தில் வைத்து, நன்கொடையாக வழங்கினார். இதை, தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர் வழங்கினார். இந்த பணத்தை ஏழுமலையானின், பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பயன்படுத்துமாறு கூறினார்.