Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் சித்திரை திருவிழா ஏப்.,22ல் ... திருப்பரங்குன்றம் மலை; புதிய வழக்கு அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலை; புதிய வழக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் பரவசம்
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் பரவசம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
05:04

உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.


உடுமலை நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழாவுக்கு, மார்ச் 24ல், நோன்பு சாட்டப்பட்டது. இதையடுத்து பக் தர்கள் விரதம் துவக்கினர். கடந்த 3ம் தேதி கொடியேற்றம் நடைபெற்ற பிறகு, பக்தர்கள் பூவோடு எடுக்கத் துவங்கினர். கோவிலில், திருக்கம்பம் மார்ச் 31ல் நடப்பட்டது. திருக்கம்பத்துக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து செலுத்தி, வழிபாடு செய்து வருகின்றனர். தீர்த்த குடங்களில் வேப்பிலை சொருகி, மஞ்சளிட்டு கொண்டு வந்து திருக்கம்பத்துக்கு ஊற்றி வருகின்றனர். நகரின் ஒவ்வொரு குடியிருப்பில் இருந்தும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருவதால், நகரே திருவிழா கோலம் பூண்டுள்ளது. நாள்தோறும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்று வந்தது.


நேற்று 8ம் தேதி அதிகாலை மாவிளக்கு எடுத்தல் நடைபெற்றது. தொடர்ந்து மாலை அம்மன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று 9ம் தேதி மாலை, 4:15 மணிக்கு துவங்கியது. ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து வழிபட்டனர். நாளை 10ம் தேதி காலை ஊஞ்சல் உற்சவம், இரவு, 7:00 மணிக்கு, அம்மன் பரிவேட்டையும், இரவு, 10:00 மணிக்கு வாண வேடிக்கையும் நடக்கிறது. திருவிழாவையொட்டி குட்டை திடலில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகளை ஆடி மகிழ்ந்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar