Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை ... சித்தர் கோவிலில் மண்டல பூர்த்தி விழா சித்தர் கோவிலில் மண்டல பூர்த்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிறைவு பெற்றது கச்சத்தீவு திருவிழா: 6,000 பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 மார்
2014
11:03

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில், இந்தியா, இலங்கையை சேர்ந்த 6,000 பக்தர்கள் பங்கேற்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவை இந்திய, இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். கடந்த 1983 ல், இலங்கையில் இனப்போர் தீவிரமானதால், கச்சத்தீவு விழாவுக்கு, இலங்கை அரசு தடைவிதித்தது. இலங்கையில் அமைதி திரும்பியதும், 2010 ஆண்டு முதல், விழா நடக்கிறது. நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தில் இருந்து 95 விசைப்படகுகளில் இந்திய பக்தர்கள் 3,160 பேர் கச்சத்தீவு புறப்பட்டனர். இதே போல, இலங்கை நெடுந்தீவு, மன்னார், பேசாளை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3,000 பேர் விழாவு வந்தனர். நேற்று முன்தினம் மாலை, நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ், கொடி ஏற்றி வைத்தார்; அன்று இரவு, சிலுவைப் பாதை பூஜை, திருப்பலி நடத்தினார். இரவில், அந்தோணியார் தேர்பவனியுடன், முதல் நாள் விழா முடிந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை, யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மைகுரு ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில், ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ், சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு அமல்ராஜ், இலங்கை பாதிரியார்கள் இணைந்து, திருப்பலி நடத்தினர். காலை 9.30 மணிக்கு, திருவிழா கொடியை இறக்கி வைத்த நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ், விழாவை முடித்து வைத்தார். விழாவில், இலங்கை ராணுவம், கடற்படை உயர்அதிகாரிகள் பங்கேற்றனர். காலை 9.50 மணிக்கு, இந்திய பக்தர்கள் படகுகளில் புறப்பட்டு, காலை 11.45 மணி முதல், ராமேஸ்வரம் கரைக்கு வரத்துவங்கினர்.

இதுகுறித்து, ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் கூறுகையில்
, ""இருநாட்டு பக்தர்களும் உற்சாகத்துடன் பங்கேற்று, புனிதரின் ஆசி பெறும் இடம் கச்சத்தீவு தான். உணவு, குடிநீரை பரிமாறிக் கொண்டு, பிரிந்த உறவினர்களை சந்திப்பது போன்ற உணர்வை இருநாட்டினரும் வெளிப்படுத்தினர், என்றார்.

கச்சத்தீவிலும் மோடி அலை!: இந்திய பக்தர்களின் பாதுகாப்பிற்காக, கடலில் இந்திய, தமிழக கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மார்ச் 15 இரவு முழுவதும், இலங்கை கடற்படை ரோந்து கப்பல்கள், கச்சத்தீவை சுற்றி வந்தனர். கச்சத்தீவில் அமைக்கப்பட்டிருந்த, "சிலோன் வங்கி யில், தமிழக பக்தர்கள் ரூபாயை கொடுத்து, இலங்கை பணத்தை (ரூபாய்) மாற்றி, சோப்பு, எண்ணெய், பொம்மைகள் வாங்கினர். இலங்கை பணத்தில், டீ- 40 ரூபாய்; தோசை, புரோட்டா- தலா 50 ரூபாய் விற்கப்பட்டது. இலங்கை கடற்படை சார்பில் பக்தர்களுக்கு, மீன் குழம்பு சாப்பாடு, பிரட், ஜாம், பிஸ்கட், குளிர்பானம் வழங்கப்பட்டது. கச்சத்தீவு விழாவில் பங்கேற்ற இலங்கை பக்தர்கள், இந்தியாவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் யார் பிரதமர் ஆவார்கள் என, ஆவலுடன் தமிழக பக்தரிடம் கேட்டுள்ளனர். அதற்கு, இந்தியா முழுவதும் மோடி அலை தான் வீசுவதால், அவர் தான் பிரதமராக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்ததும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக, ராமேஸ்வரம் திரும்பிய தமிழக பக்தர்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் சகாயராஜ் என்பவரது படகில் பலகை உடைந்து, மார்ச் 15 ம் தேதி இரவு கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது. அதில் சென்ற பக்தர்கள் 33 பேரும், மற்றொரு படகில் ஏறி கரை வந்தனர். ஓரிரு தினங்களில் மூழ்கிய படகை மீட்க, மீனவர்கள் குழு கச்சத்தீவுக்கு செல்ல உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar