ஊட்டி : ஊட்டி எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை, மாதாந்திர பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு சித்திசெல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழுஹெத்தையம்மன், நவக்கிரகங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புபூஜை நடந்தது. தொடர்ந்து சந்திரன் குழுவினரின் பஜனை, தஞ்சை அருளாளர் ஆனந்தசித்தரின் அருளுரை, ராஜூபெட்டன், பெள்ளன் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.