Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னமலை முருகன் கோவில் விழா லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் விழாவில் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2014
02:04

மோகனூர்: மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மோகனூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 31ம் தேதி, காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும், காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி, ஸ்வாமியை வழிபட்டனர். அதேபோல், தினமும் இரவு ஸ்வாமி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம், இரவு, 7 மணிக்கு வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைத்தனர். நேற்று அதிகாலை, 5 மணிக்கு பூக்குழி பூஜை நடந்தது. காலை, 10 மணிக்கு காவிரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடமும், அக்னி சட்டியும் எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அதை தொடர்ந்து, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடந்தது. மதியம், 3 மணிக்கு காவிரி ஆற்றுக்குச் சென்ற, ஏராளமான ஆண், பெண் பக்தர்கள், புனித நீராடி ஊர்வலமாக வந்து கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, ஸ்வாமிக்கு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு, 7 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது.இன்று, (ஏப்., 15) காலை, கிடா வெட்டியும், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பக்தர்கள், ஸ்வாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar