தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமானை மகாதேவன் என்பர். அவரை சம்போ மகாதேவா என்று வாய்விட்டு கூவி அழைப்பதை கேட்டிருப்பீர்கள். சிவபெருமானுக்கு பல நாமங்கள் உண்டு. அதில் சம்பு என்பதும் ஒன்று, சம்பு என்றால் இன்பத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவர் என்பது பொருளாகும். சம்பு என்பது பின்னாளில் சாம்பவன், சாம்பான், சாம்பு எனப் பலவகைகளிலும் திரிந்தது.