இறைவனை வணங்கும் போது இரண்டு கைகளையும் ஒன்றுக்கொன்று அழுத்தமாக சேர்ந்து இருக்கு வகையில் வணங்கக்கூடாது. தாமரை மொட்டு போல குவித்து வைத்தே வணங்கவேண்டும். விக்ரகத்தில் இருந்து ஒருவித காந்த சக்தி வெளிப்படும். அது பாம்பு வடிவத்தில் பக்தனை நோக்கி வரும். அவை பஞ்ச பூதசக்தியாகப் பிரிந்து விரல்கள் வழியாக மூளையைச் சென்றடைந்து உடல் முழுவதும் வேக மாகப்பரவும். அப்போது புத்துணர்ச்சி ஏற்படும். பூமி சக்தி சிறிய விரல் மூலமாகவும், தண்ணீர் சக்தி மோதிர விரல் மூலமாகவும், அக்னி சக்தி நடுவிரல் மூலமாகவும், வாயுசக்தி ஆட்காட்டி விரல் மூலமாகவும், ஆகாய சக்தி பெருவிரல் வழியாக செல்லும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்.