பதிவு செய்த நாள்
26
மே
2014
12:05
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் வைகாசி பெருவிழாவையொட்டி காமதேனு வாகனம் வீதியுலா நடந்தது. சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் வைகாசி பெருவிழாவையொட்டி கடந்த 19ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கி தொடர்ந்து சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதகி வாகனம், தெருவடைச்சான் நடந்தது. நேற்று முன்தினம் இரவு காமதேனு வாகனம் வீதியுலா நடந்தது. கோவிலில் இருந்து துவங்கி நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கோவிலில் வந்தடைந்தது. தொடர்ந்து கைலாய வாகனம், ரிஷப வாகனம், திருத்தேர், ரத அவரோகனம், தீர்த்தவாரி, சிம்ம வாகனம், மஞ்சள் நீர் விளையாட்டு, தெப்போற்சவம், திருஊஞ்சல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் முருகன் செய்து வருகின்றனர்.