பதிவு செய்த நாள்
26
மே
2014
12:05
காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்பணம் முடிந்து நேற்று காலை தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வர பகவான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை முடிந்து, கொடியேற்றம் நடந்தது.நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி, தருமபுர ஆதீனம் கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இன்று முதல் 28ம் தேதி வரை விநாயகர் உற்சவம், 29 மற்றும் 30ம் தேதி சுப்ரமணியர் உற்சவம், 31ம் தேதி அடியார் நால்வர் உற்சவம், 1ம் தேதி அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா, 2ம் தேதி செண்பக தியாகராஜர் சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளல், 6ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 8ம் தேதி காலை 7:00 தேரோட்டம் நடக்கிறது. 9ம் தேதி தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலாவும், 10ம் தேதி தெப்பல் உற்சவமும் நடக்கிறது.